Saturday, 15 October 2011

வாழ்கோட்டுச் சித்திரம்

                                                   



லட்சங்களில் ஒன்றைத்
துளைத்துவென்ற
மோதல்களின் இறுதியில்
துவங்கும் ஆரம்பம்


குளம்பிப் பிசைந்ததும்
நறுமணமாய் பரவும்
சவ்வாது கலந்த
சந்தனக்கீற்றுகளாய்
பூரிப்பும் பொலிவும்


விளைந்து வழியும்
பூங்கொல்லைகளில்
துரிதமாய் நடக்கும்
பூப்பறிப்பும் பூப்பிறப்பும்
காய்ந்த பூக்களை மிதித்தபடி


அடித்துச்செல்லும்
காலவெள்ளத்தில்
கசடுகளாய் ஒதுக்கப்படும்
தேவைப்பொறுக்கலும்
ஆசைச்சுருக்கலும்


எங்கோ கேட்கும்
ஊர்க்குருவியின் கதறலை
அவதானிக்க மறந்த
சுவாதீனமில்லாத
கூட்டுப்புழுக்களுடன் தொடரும்
சாத்வீக சதிராட்டம்


ஒரு
நமட்டுச்சிரிப்பை மட்டும்
இறுதியில் தந்துசெல்லும்
இருப்பின் நிறைவும்
இழப்பின் வலிகளும்....

No comments:

Post a Comment